[Image source : CEN]
550 குழந்தைகள் பிறப்புக்கு காரணமான ஒரு நபருக்கு விந்து தானம் அளிக்க நெதர்லாந்து நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த மெய்ஜர் எனும் 41 வயது நபருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் இனி விந்து தானம் செய்யவே கூடாது என தீர்ப்பளித்துள்ளது. அதாவது அந்த நபர் கடந்த 2007 முதல் விந்து தானம் செய்து வந்துள்ளார். இதுவரை 550 முதல் 600 குழந்தைகள் உருவாக காரணமாக இருப்பார் என கூறப்படுகிறது.
இது குறித்து ஓர் அறக்கட்டளை நிறுவனம் நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றத்திற்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. நெதர்லாந்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 12 பெண்கள் அல்லது 25 குழந்தைகள் வரை மட்டுமே விந்து தானம் செய்ய அனுமதி உண்டு. அப்படி இருக்கையில் மெய்ஜர் சுமார் 550 குழந்தைகளுக்காக விந்து தானம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
11 நெதர்லாந்து மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 13 மருத்துவமனைகளுக்கு விந்து தானம் அளித்துள்ளார். இதனை கண்டறிந்த நெதர்லாந்து நீதிமன்றம் இனி 41 வயதான மெய்ஜர் விந்து தானம் செய்ய கூடாது எனவும் அப்படி மீறி விந்து தானம் செய்தால் 100,000 யூரோக்கள் ( இந்திய மதிப்பில் 90,41,657) அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…