Categories: உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!

Published by
பால முருகன்

Earthquake : இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் எவ்வளவு பேருக்கு காயம் ஏற்பட்டது எவ்வளவு பொருள் சேதம் என்பதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் பஞ்சார் நகருக்கு தெற்கே 102 கிலோமீட்டர் (63 மைல்) தொலைவில் 68.3 கிலோமீட்டர் (42.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் உயரமான அடுக்குகள் சுமார் ஒரு நிமிடம் கிடுகிடுத்ததாம். மேற்கு ஜாவா மாகாண தலைநகரான பாண்டுங் மற்றும் ஜகார்த்தாவின் துணைக்கோள் நகரங்களான டெபோக், டாங்கெராங், போகோர் மற்றும் பெகாசி ஆகியவற்றில் இரண்டு மாடி வீடுகள் பலமாக குலுங்கியது.

இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது எனவும் இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் தகவலை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடத்த 2022-ஆம் ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 602 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

31 minutes ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

57 minutes ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

2 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

5 hours ago