Categories: உலகம்

ஜிம்மில் அதிர்ச்சி! டிரெட்மில்லில் ஓடும் போது கீழே விழுந்து உயிரிழந்த பெண்!

Published by
பால முருகன்

இந்தோனேசியா : ஜிம்மில் பயிற்சிக்காக வந்த  இளம் பெண் ஒருவர் டிரெட்மில் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

22 வயதான பெண், செவ்வாய்கிழமை, மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, டிரெட்மில்லில் ஓடி கொண்டு இருந்த சமயத்தில் நிலை தடுமாறி பின்னாடி ஜன்னலை நோக்கி மெதுவாக சென்றார்.

கீழே விழுவதற்கு முன்பு ஜன்னலை பிடிக்க முயன்ற போதிலும், நிலை தடுமாறிய அந்த பெண் ஜிம் கட்டிடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் பலத்த காயங்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காட்டியது. இறந்த பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் உள்ளூர் அறிக்கைகள் அவருக்கு 22 வயது என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த அந்த பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றிருந்தார், காதலன் இரண்டாவது மாடியில் அவருடன் உடற்பயிற்சி செய்யச் சொன்னார், ஆனால், அந்த பெண்  மேல் மாடியில் உள்ள  டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி சென்ற நிலையில், பரிதாபமாக கீழே விழுந்து  உயிரிழந்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

7 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago