Categories: உலகம்

துருக்கி: கேளிக்கை விடுதியில் தீ விபத்து…29 பேர் பலி!

Published by
பால முருகன்

TURKEY : துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டு பணியாளர்கள் மற்றும் வேலை செய்து கொண்டு வந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த தீ  விறு விறுவென அங்கு இருந்த மதுபானங்களால் பற்றி எரிய தொடங்கியது. இதன் காரணமாக வேகமாக அந்த கேளிக்கை விடுதியின் முழுவதுமே தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைவாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை கொடுத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இருப்பினும், தீ மதுபானத்தில் பட்டு எரிந்ததால் தீயணைப்பதற்குள் அந்த கேளிக்கை முழுவதுமே தீயினால் இருந்தது. இந்த தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைப்போல, இந்த விபத்தில் 8 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் மிகவும் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் ஆபத்தானநிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கேளிக்கை விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Recent Posts

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

9 minutes ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 minutes ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

39 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

1 hour ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

2 hours ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago