CongoArmy [Image Source : africanews]
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில், அந்நாட்டின் ராணுவம் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 1,500 பேரை புதிதாக பணியமர்த்த உள்ளதாகவும், இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் தலைநகர் பிரஸ்ஸாவில்லியில் நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் படி, பிரஸ்ஸாவில்லியில் உள்ள மைக்கேல் டி’ஓர்னானோ மைதானத்தில் நேற்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்தனர். அப்போது இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேரப் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் இளைஞர்கள் அனைவரும் மொத்தமாக மைதானத்திற்குள் நுழைய முயற்சி செய்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் நிற்க முடியாமல் கீழே விழுந்து மற்றவர்களால் அவர்களை மிதித்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பிறகு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கும், பிரஸ்ஸாவில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 32 உடல்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஆட்சேர்ப்பு நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பதை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…