ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் வீட்டில் தயாரித்த மதுபானத்தை குடித்து 8 பேர் உயிரிழந்துள்ளார்கள்.மேலும் 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வீட்டில் வைத்து மதுபானம் தயாரித்து விற்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் எட்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .இச்சம்பவத்தை பற்றி சுகாதார அதிகாரி கொடுத்த பேட்டியில் , சிகிச்சை பெற்று வரும் 51 பேரில் பதினேழு பேர் ஆபத்தான நிலையிலும் 30 பேர் டயலாசிஸ் செய்து வருகிறார்கள்.
மெத்தனால் பொதுவாக உறைதல் எதிர்ப்பு, கரைப்பான்கள் மற்றும் எரிபொருளைத் தயாரிக்கப் பயன்படுகிறது, ஆனால் சில சமயங்களில் ஆல்கஹால் உள்ளடக்கத்தை அதிகரிக்க சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் ஸ்பிரிட்களில் சேர்க்கப்படுகிறது. சிறிய அளவில் கூட உட்கொண்டால், அது குருட்டுத்தன்மை அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் மக்கள் மெத்தனால் கலந்த மதுபானத்தை அதிகமாக அருந்தி ஆயிரக்கணக்காகவர்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள்.இதற்கு ஆல்கஹால் அருந்தினால் கொரோனா தொற்று பரவாது என்ற பொய்யான தகவலின் மீது கொண்ட நம்பிக்கையே காரணம்.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரானின் சுகாதார அமைச்சகம் 500 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்டவர்கள் விஷத்தினால் பாதிக்கபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…