வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 10 நாள் நினைவு அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா நாட்டின் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜோங் இல் (Kim Jong il) அவர்களின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 17 ) அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி வட கொரியா அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை வட கொரியாவில் விதித்துள்ளது. அதுவும் இன்று முதல் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள் நினைவு தினம் அனுசரிப்பை முன்னிட்டு அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளில் முக்கியமானவை என்னவென்றால், 10 நாட்கள் நாட்டுமக்கள் சிரிக்க கூடாது. 10 நாட்கள் யாரும் மது அருந்த கூடாது. தேவையான அதவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்ற பொருட்களை வாங்க ஷாப்பிங் செல்ல கூடாது.
பிறந்தநாள் பார்ட்டி, இறுதி சடங்கு ஊர்வலங்கள் போன்றவை பிரமாண்டமாக நடத்த கூடாது. என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாம்.
ஏற்கனவே இதே போல கடந்த முறை நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது, வட கொரியாவில் பலர் மது அருந்தியதாகவும், கட்டுப்பாடுகளை மீறியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதாம்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…