ஆக்சிஜன் லீக்.., இந்தியரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு.!

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்த‌து. இந்த பணியின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா ஐஎஸ்எஸ்-க்கு அனுப்பப்பட இருந்தார்.

AX4 - NASA

 ஃபுளோரிடா : இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

ஸ்பேஸ்எக்ஸ் குழுக்கள், LOx கசிவை சரிசெய்யும் வகையில், Ax-4 பணிக்காக நாளை ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் விண்வெளி தூரம் கிடைப்பதைப் பொறுத்து புதிய ஏவுதள தேதி பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சியம்-4 விண்கலம் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்படுவது இது நான்காவது முறையாகும். நேற்றே விண்வெளிக்குப் புறப்பட இருந்த நிலையில், மோசமான வானிலையால் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மீண்டும் இன்று மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது. இப்பொது ஆக்சிஜன் லீக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சியம்-4 விண்கலம் பயணம்

ஆக்சியம்-4 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதும், Axe-4 பயணத்தின் கீழ் உள்ள விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 14 நாட்கள் செலவிடுவார்கள். இந்த நேரத்தில், அவர்கள் நுண் ஈர்ப்பு விசை, உயிர் அறிவியல் மற்றும் பொருள் அறிவியல் தொடர்பான பல அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். இந்த சோதனைகள் உலகெங்கிலும் உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்தப்படும்.

சுபான்ஷு சுக்லா

இந்தியாவின் உள்நாட்டு விண்வெளிப் பயணமான ககன்யானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபன்ஷு, சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் ஆவார். விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் இவர்தான். முன்னதாக, ராகேஷ் சர்மா 1984 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தில் சல்யுட் 7 விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்தார்.

மேலும், இந்த விண்வெளிப் பயணம் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, ராகேஷ் சர்மாவின் 1984 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. சுபன்ஷு சுக்லா இந்திய விமானப்படையின் குழுத் தலைவராகவும், ககன்யான் திட்டத்தின் நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவராகவும் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்