இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம்.!
நீலகிரி மாவட்டத்திற்கு 14, 15-ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (ஜூன் 11) திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ரெட் அலர்ட்
நீலகிரி மாவட்டத்திற்கு 14, 15-ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
3 நாள்களுக்கு கனமழை
14-ம் தேதி கோவையில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 15-ம் தேதி கோவை, நெல்லை, தென்காசி, குமரியில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல்லில் கனமழையும், 16-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, தென்காசியில் கனமழையும் பெய்யக்கூடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
அகமதாபாத் விமான விபத்து : இதுவரை 133 பேர் உடல் மீட்பு!
June 12, 2025