காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது. காசா நகரில் இன்று (ஜனவரி 19) முதல் 6 வார காலத்திற்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும், இந்த போர் நிறுத்த காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. முதலில் இன்று ஹமாஸ் தரப்பில் உள்ள 33 பணய கைதிகளில் 3 பேரை காசா நகரில் […]
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது இன்று முதல் 6 வார காலத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டது. இந்த 6 வார காலத்தில் இரு தரப்பும் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுவிப்பார்கள் என கூறப்பட்டது. இன்று மாலை இந்த பரிமாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், நேற்று இரவு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தரப்பு 33 பணய […]
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தலத்திலும் ஈடுபட்டன. இதனை அடுத்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் […]
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி தீர்பபை அண்மையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் செயல்பாட்டில் இருக்கும் டிக் டாக் செயலி மூலம் அந்நாட்டு பயனர்களின் தரவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. டிக் டாக் செயலியின் தரவு மேலாண்மையானது அதன் தலைமை இடமான சீனாவில் தான் உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் தரவுகள் பாதிக்கப்படுவதாக கூறி டிக் டாக் செயலியை […]
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் கடந்த 2023-ல் தொடங்கிய இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர், கிட்டத்தட்ட 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனியர்கள் கொண்டாடினர். காசா பகுதியில் 15 மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்கள் […]
சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அதற்கு காரணம் காற்று தான், பலத்த காற்று காரணமாக தீ பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு விழுந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் எரிந்து வரும் காட்டுத்தீ பகுதிகள் உட்பட […]
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 15மாதங்கள் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மத்தியஸ்தலம் செய்தன. பல்வேறு நாட்டு தலைவர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்னர். இந்தியாவும், […]
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிறுவனம் ஆகும். காரணம், இந்த நிறுவனம் தான் இந்திய பங்குசந்தையில் அதிவேகமாக வளர்ந்து வந்த அதானி பங்குகள் குறித்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து இந்திய பங்குசந்தையையே ஆட்டம் காண வைத்தது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் அதானி நிறுவனனத்தை மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட பல்வேறு நிறுவனங்களின் மீது நிதி மற்றும் அந்நிறுவனங்களின் பொருளாதார கொள்கைகள் […]
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதில் ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியத்தில், சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். திருப்பி இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில், 46,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இதற்குப் […]
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட் எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நெறியாளர் பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கேட்டறிந்தார். அதில் வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் செய்திகள் பற்றியும் கேட்டறிந்தார். அதற்கு பதில் அளித்த மார்க், வாட்ஸ்அப்பில் பயனர்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA கண்காணிக்க முடியும் முடியும் என்ற தகவலை கூறினார். பயனர்கள் […]
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்படுவதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால் ஜப்பானின் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்தன. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணத்தால் மக்கள் […]
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த நாளை எதிர்நோக்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர் என பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்வைத்த முக்கிய வாக்குறுதியை இனி அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும், அமெரிக்க […]
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. சொல்லப்போனால், அமெரிக்காவின் முக்கிய தலைகள் தங்கியிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சாம்பலாகி வருகிறது. லாஸ்ஏஞ்செல்சில் பற்றி எரிந்து வரும் தீக்கு நேற்று வரை 16 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் மேலும் 8 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் காணவில்லை என்றும் அந்தத் […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கல்வி குறித்த மாநாடு என்பதால் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்த மாநாட்டில் முக்கியமாக பங்கேற்க வேண்டிய ஆப்கானிஸ்தான் மாநாட்டை புறக்கணித்துள்ளது. ஆபாகனிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் ஆனால் அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அந்நாட்டில் மற்ற […]
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல் அதற்குள் கார் செல்வதால் தடுமாறும் நிலையோ, அதிக சஸ்பென்ஷன் திறன் இருந்தாலும் அந்த மேடு பள்ள தடைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, சீனா கார் தயாரிப்பு நிறுவனமான BYD நிறுவனம் புதிய கார் ஒன்றை தயாரித்துள்ளது. Yangwang U9 எனும் பெயரிடப்பட்ட இந்த மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், காரில் சென்று […]
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் USA Today எனும் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியபோது “அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறை போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு இவர் உறுதியுடன் இதை கூறியதற்கு காரணமே ஏற்கனவே, ஜோ பைடன் டிரம்ப்பை வீழ்த்தி அதிபராக […]
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின என ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது. கலிபோர்னியாவில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையால் நிலங்கள் மிகவும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த நிலைகள், தாவரங்கள் மற்றும் காடுகள் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தீ பற்றியவுடன் மற்ற இடங்களுக்கு பரவ அங்கு ஏற்பட்ட காற்றே முக்கிய காரணமாகவும் […]
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி பரிவர்த்தனைகளில் மறைத்தாகவும் டிரம்ப் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நியூ யார்க் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவித்தது. நியூ யார்க் நீதிமன்ற நீதிபதி எலன் கெஸ்மர், நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்றும் இதற்கான தீர்ப்பு ஜனவரி 10-ல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். […]
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் லாபுசே நகரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டன […]
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. தற்பொழுது, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தூள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், திபெத் பகுதிகளில் சேதமடைந்த […]