டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப் பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு உள்ளார் நேரப்படி மாலை 5:32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், டோரிஷிமா தீவுகளின் அருகிலுள்ள கடலில் உணரப்பட்டுள்ளது. ஜப்பானிய நில அதிர்வு அளவு 7 இல் 2 ஆக இருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) […]
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் – திபெத் எல்லையில், இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, […]
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே […]
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் 6.35 மணிக்கு ஏற்பட்டது. லாபுசே நகரத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த இடத்தில் உள்ள கட்டடங்கள் குலுங்கின, ஆனால் இதுவரை பொருட் சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு […]
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ 2013 ஆம் ஆண்டு கனடா லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், லிபரல் கட்சி மிகுந்த சிக்கல்களில் சிக்கியிருந்தது. 2011 ஆம் ஆண்டு, லிபரல் கட்சி ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அதிகமாகக் குறைந்திருந்தது. அதனை […]
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அமெரிக்க அரசிடம் புகார் அளித்து இருந்தனர். இறுதியாக நியூ யார்க் மாகாணம் ஓசோன் பகுதி பூங்காவில் 2024, அக்டோபர் 22ஆம் தேதியன்று அவர் காணப்பட்டார் என கூறப்பட்டது. இதனை அடுத்து, அமெரிக்க FBI தீவிர சோதனை மேற்கொண்டது. அதில், நியூ ஜெர்சி மாகாணத்தில் மான்செஸ்டர் […]
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்ப் அவருக்கு பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை ரெனோ, நெவாடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்தார் எனவும், தன்னுடன் இருந்தால் டிரம்ப் தனது தொலைக்காட்சி […]
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இம்மாதம் அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . அதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (அந்நாட்டு எம்பிகள்) உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். நேற்று (ஜனவரி 3) அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இருந்து 6 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி ஏற்றனர். […]
அமெரிக்கா: ஹே சிரி… இதை செய், ஹே சிரி… அதை செய்… என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில் இருக்கும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் என்று சொல்லப்படும் ‘ஹே சிரி’-க்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு கேட்ட செய்தி என்றே சொல்ல வேண்டும். அதாவது, ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ‘ஹே கூகுளை’ போல், ஆப்பிள் போன்களில் ‘ஹே சிரி’ (Siri) என்ற தனிப்பட்ட அம்சம் உள்ளது. இது நாம் என்ன கேட்கிறோமோ அதற்கு விளக்கம் கொடுக்கும். இந்த நிலையில், […]
அமெரிக்கா : நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக போர்பன் ஸ்ட்ரீட் பகுதியில் மக்கள் ஆட்டம் பட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில், வேண்டுமென்றே பிக்கப் டிரக்கை ஒரு நபர் வேகமாக அந்த பகுதியில் ஒட்டி கொண்டு அங்கிருந்தவர்கள் மீது மோதினார். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த […]
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ […]
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது. இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க […]
நியூசிலாந்து : உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தயாராகி உள்ளனர். நம்மூரில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்த சரியாக 12 மணிக்கு நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவரில் வாணவெடிகள் வெடித்து மக்கள் கீழே கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சி காண்போரை திகைக்க வைத்தது. […]
கிரிபாட்டி: உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி (Kiribati) எனும் கிறிஸ்துமஸ் தீவில் (Christmas Island) புத்தாண்டு பிறந்தது. அங்கு 2024-ம் ஆண்டு நிறைவடைந்து, தற்பொழுது 2025ம் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் ஆகிய புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர் கிரிபாட்டி மக்கள், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் […]
அடிஸ் அபாபா : எதியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சிடமா மாநிலத்தில் உள்ள போனோ பகுதியில் (தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 300கிமீ தொலைவில்) உள்ள ஆற்று பாலத்தில் நேற்று ஒரு கோர விபத்து ஏற்பட்டு 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போனோ பகுதியில் நடைபெற இருந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருமண வீட்டார், ஒரு டிரக்கில் (லாரி) சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கெலன் பாலத்தில் டிரக் கட்டுப்பாட்டை […]
முவான் : நேற்று (டிசம்பர் 29) காலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்டு வந்த ஜேஜூ விமான நிறுவனத்தின் போயிங் 737-800 என்ற விமானம் தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட இடர்பாடுகளால் விமானம் பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் மொத்தம் 175பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த […]
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை சபைகளை கொண்டு உலகளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இச்சபையின் மூலம், மதத் தலைவர்களுக்கான 115வது பட்டமளிப்பு விழாவானது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவானது முதலில் தென் கொரியாவில் இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அந்நாட்டு பண மதிப்பீட்டில் சுமார் […]
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது இன்று (ஞாயிற்று கிழமை) 175 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் தாய்லாந்து நாட்டில் இருந்து தென் கொரியாவின் முவான் (Muan ) விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த […]
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி (டிச,25ம் தேதி) அன்று காலமானார் என்று ஜப்பானின் சுசூகி மோட்டார் நிறுவனம் (டிச.27) தெரிவித்துள்ளது. இவர், எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். ஒசாமு சசுசூகி, மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் இயக்குநராகவும், கௌரவத் தலைவராகவும் இருந்தார். தற்பொழுது, […]