ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி (டிச,25ம் தேதி) அன்று காலமானார் என்று ஜப்பானின் சுசூகி மோட்டார் நிறுவனம் (டிச.27) தெரிவித்துள்ளது. இவர், எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். ஒசாமு சசுசூகி, மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் இயக்குநராகவும், கௌரவத் தலைவராகவும் இருந்தார். தற்பொழுது, […]
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுவதும், பிறகு இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்கதையாகி கொண்டே இருக்கிறது. அண்மையில் இலங்கை அதிபர் டெல்லி வந்த போது கூட, பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்கள் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தார். மீனவர்கள் சுருக்கும்டி வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதனால், கடல் […]
கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு […]
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் […]
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே இஸ்ரேல் – பாலஸ்தீன், ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் வேளையில் நேற்றைய தினம் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இப்பொது வரை ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அதாவது பாகிஸ்தான் […]
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, 1,200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி மதியம் பொழுதில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. முதற்கட்ட […]
கராச்சி : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அவர் சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் முதல் பன்னாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2023, மே 9ஆம் தேதியன்று, இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவளர்கள் […]
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயமடடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து ஏற்பட்டு விமானம் பல கட்டிடங்களில் மோதியதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் சேதமும் அடைந்தது. மோதலின் போது ஏற்பட்ட தீயினால் புகையை உள்ளிழுத்து பலர் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விமான நிலையத்திலிருந்து […]
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இவ்வாறு அனைத்து வசதிகளும் நிறைந்த யூடியூப் மில்லியனுக்கு மேலான பயனர்களை கொண்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டே பயனர்கள் தங்களது வீடியோக்களை அப்லோடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அரசியல், சுகாதாரம், கலாச்சாரம், சமையல் , விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஆபாசம் உள்ளிட்ட அனைத்திற்குகும் இந்த யூடியூப் தளத்தை மக்கள் பயன்படுத்தி […]
ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள நகரத்தின் பெரிய பில்டிங் மீது வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் மோதி வெடித்து சிதறியது. இதனால் நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது ரஷ்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கசான் நகரத்தில் உக்ரைன் நடத்திய, இந்த ஆளில்லா ட்ரோன் தாக்குதல் 9/11 பாணியில் இருப்பதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த கசான் நகரம் மாஸ்கோவிலிருந்து […]
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம், திடீரென ஒரு கார் ஒன்று சந்தையில் நுழைந்து வேண்டுமென்றே அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது. இந்த கொடூரமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 68 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட […]
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து என்ன செய்தாலும், அது தொழில்நுட்பத்தின் கண்ணில் சட்டெனெ பட்டுவிடுகிறது. சற்று தாமதமானாலும், குற்றவாளி தப்ப முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ளது. வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் எனும் நடுத்தர வயது நபர் ஒருவர் கடந்த வருடம் அக்டோபரில் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் […]
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயர் வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட சிடோ சூறாவளி புயல் ஆப்பிரிக்காவை ஒரு வழி செய்தது என்றே சொல்லலாம். இந்த புயலின் காரணமாக குடிசை நகரங்கள் […]
வனுவாட்டு: ஆஸ்திரேலியா அருகேயிருக்கும் ‘வனாட்டு’ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், போர்ட் விலாவில் உள்ள மீட்புப் படையினர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று […]
பசிபிக் பெருங்கடல் : உள்ள வனுவாடூ தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதனை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து […]
ஜார்ஜியா : நாட்டில் உள்ள மலை விடுதியான குடாரியில் உள்ள உணவகத்தில் 11 இந்தியர்கள் விஷவாய்ப்பு தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்தது இந்திய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் உண்மையில் விஷய வாய்ப்பு தாக்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி ஜார்ஜியாவின் உள் விவகார அமைச்சகம் பரிசோதனை நடத்த தொடங்கியது. அப்போது உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் அல்லது வன்முறை எதுவும் நடந்த அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து உள்ளூர் ஊடகங்கள், போலீஸ் […]
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மயோட் (Mayotte) தீவானது அண்மையில் வீசிய புயலால் பெரும் பொருட்சேதத்தையும், உயிர்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் மீட்புப்பணிகள் தொடர்வதால் உயிர்சேத எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான, மயோட் தீவானது, இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்நாட்டு தலைநகர் பாரிசில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது ஏழ்மையான பகுதியாக பார்க்கப்படுகிறது. சுமார் […]
சான் பிரான்சிஸ்கோ : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயங்குதளமான OpenAI -ன் ChatGPTயை உருவாக்கியதில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிய சுசிர் பாலாஜி என்பவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ChatGPT மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நாட்களில் பாலாஜியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த மரணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த மரணம் தற்கொலை என […]
சீனா : இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று (10) கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து சீனா தூதர் இலங்கை பிரதமரிடம் சீருடைகளை வழங்கினார். சீனா வழங்கியுள்ள அந்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளது. ஏற்கனவே, முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 25-ஆம் தேதி மூன்றாவது தொகுதியாகவும் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை (விசா), படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளை பெற்று வசிப்பவர்களை தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்க குடிமகன்களாக இருக்க அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் பிறந்து இருந்தால் எளிதாக குடியுரிமை (விசா) கிடைத்துவிடும். இந்த பிறப்பால் குடியுரிமை பெற்ற அயல்நாட்டினர் அங்கு கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் […]