வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேறி தொழில் ரீதியான குடியுரிமை (விசா), படிப்பதற்கான குடியுரிமை (விசா) போன்ற தற்காலிக குடியுரிமைகளை பெற்று வசிப்பவர்களை தவிர்த்து அங்கு நிரந்தர அமெரிக்க குடிமகன்களாக இருக்க அயல்நாட்டினர் நீண்ட வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு பெற வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவில் பிறந்து இருந்தால் எளிதாக குடியுரிமை (விசா) கிடைத்துவிடும். இந்த பிறப்பால் குடியுரிமை பெற்ற அயல்நாட்டினர் அங்கு கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிப்பதில் இந்தியர்கள் மட்டும் […]
சியோல் : அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை சட்ட மூலம் குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, தேச விரோத சக்திகளை ஒழிக்க அவசரநிலை இராணுவ சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அதிபர் யூன் சூக் இயோல் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் வட கொரியாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் அரசை அதன் கடமையை செய்யவிடாமல் தடுக்கிறது அதன்காரணமாக இப்படியான அவசரநிலை சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் அறிவித்தது […]
டமாஸ்கஸ் : உலகமே உற்றுநோக்கும் தலைப்பு செய்தியாக தற்போது மாறி இருக்கிறது சிரியா நாட்டின் உள்நாட்டு போரும், அந்நாட்டு அதிபர் தப்பியோடிய தகவலும் தான். உள்நாட்டில் பல்வேறு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்து வந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு சிரியா நாட்டின் தலைநகரை கைப்பற்றியுள்ளது. இதனால், சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தனி விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். அவர் தற்போது ரஷ்யா மாஸ்கோவில் […]
டமாஸ்கஸி : சிரியா நாட்டில் உள்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் நாட்டை கைப்பற்றி விட்டனர். அவர்கள் தலைநகர் டமாஸ்கஸை முழுதாக கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் தலைநகரை விட்டு தனிவிமானம் மூலம் தப்பி சென்றுள்ளார். இதனால் தப்பி சென்ற சிரியா நாட்டு அதிபரை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். ராணுவம் மற்றும் உளவுத்துறை மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் அந்நாட்டு செய்தி நிறுவனங்களின் தகவலின்படி […]
கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குஅந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது பின்வாங்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் ரிகான் எல்லைக்கு அருகிலுள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே வியாழன் அன்று உள்ளூர் நேரடி காலை 10.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மகானா […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல் பரபரப்பான ஒரு சூழலில் தான் இருக்கிறது. இந்த போர் நடைபெற்ற போது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூரமான தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, யாரெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அவர்களும் தாக்கி நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து சென்றார்கள். இதனால் இன்னுமே கடும் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கள் மீதே தாக்குதல் நடத்துகிறீர்களா? உங்களை அழிக்கும் வரை […]
கினியா : மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா நாட்டில் கடந்த 2021இல் இருந்து ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதி மமதி டூம்பூயா அதிபராக தான்னை அறிவித்து ஆட்சி செய்து வருகிறார். அடுத்த வருடம் இங்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படியான சூழலில், ராணுவ தளபதி மமதி டூம்பூயா பெயரில், கினியாவின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான N’Zerekore எனும் ஊரில் கடந்த ஞாயிறன்று உள்ளூர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் தற்போது அதிபர் பதவியில் இருக்கும் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தது, 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு ஆகிய வழக்குகளில் சிக்கிய காரணத்தால் அமெரிக்க நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து, ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி குற்றவாளியில் இருந்து அவரை விடுதலை செய்தார். பொதுவாகவே, அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், எதாவது குற்ற […]
பெய்ரூட் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான போரானது தொடங்கியது. இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கியவர்கள் தான் ஹிஸ்புல்லா அமைப்பினர். அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் தான் இரான். ஒரு வருடமாக இவர்கள் இடையில் மாறி மாறி நடந்த தாக்குதலில், பல்லாயிரம் கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், உலக நாடுகளிடையே போர் பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கியது. ஐ.நா சபையிலும் இது குறித்த சர்ச்சைகளுக்கு இஸ்ரேல் கண்டுக்காமல் […]
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தற்போது வரை முழுதாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அதேபோல, இஸ்ரேல் ராணுவத்திற்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கியதில் இருந்து குறைந்தது 3,700 லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 15 ஆயிரத்திற்கும் […]
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான ஒரு விஷயமாகவே வைத்திருக்கிறார். அவர் அப்படி பயனர்களுக்கு பதில் அளிக்கும்போது ஏதாவது விஷயம் வேடிக்கையாக இருந்தது என்றால் உடனடியாக அவருடைய பதிவு ட்ரெண்டிங்கில் வந்துவிடும். Since it’s almost 2:30 ET pic.twitter.com/d6CFT0wtVv — Elon Musk (@elonmusk) November 24, 2024 அப்படி தான் தற்போது அவர் போட்ட பதிவின் மூலம் ஏலான் மஸ்க் […]
ஜெருசலேம் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நின்றபாடில்லை. கடந்த ஓராண்டாகவே இந்த இரு அமைப்புகளும் இஸ்ரேல் மீதும் இஸ்ரேல் இந்த இரு அமைப்புகளின் மீதும் போர் செய்து வருகின்றனர். தற்போது மீண்டும், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளைத் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். சமீபத்தில், காசா மீது […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதற்கு, ‘இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும், அமெரிக்கா முன்வைத்த குற்றசாட்டைத் தொடர்ந்து, இந்திய பங்குசந்தையில் கடும் சரிவும் ஏற்பட்டது. இந்த வழக்கில் […]
மாஸ்கோ : ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர் புடினும், ‘எங்கள் மீது ஏவுகணை வீசும் நாடு எதுவாக இருந்தாலும் நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம்’ என தெரிவித்திருந்தார். அதே போல, ‘அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்பிடம் போர் நிறுத்தத்தைக் குறித்து பேசவும் தான் தயார்’ எனவும் கூறியிருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் பேசும்வண்ணமாக மாறியது. இந்த நிலையில், ரஷ்யாவின் முன்னாள் ராணுவ தளபதியும் […]
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச புகார் காரணமாக நேற்று அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. மேலும், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சர்வதேச சந்தைகளில் முதிலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடபட்டது. இந்த குற்றசாட்டை அடுத்து, அமெரிக்காவில் முதலீட்டுக்கான கடன் பத்திரங்களை வெளியிடும் முடிவை தற்காலிகமாக அதானி குழுமம் நிறுத்தி வைத்தது. அதானி குழுமம் – அமெரிக்க வழக்கறிஞர்கள் […]
துபாய் : பிரிட்டனைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா என்கிற 18 வயதுடைய சிறுவன், பள்ளி விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு 17 வயது சிறுமியுடன் உடலுறுவுகொண்டதற்காக சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு லண்டனில் உள்ள டோட்டன் ஹாமைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா, பள்ளி விடுமுறையை துபாயில் கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அந்த சிறுவன் கடந்த செப்டம்பர் மாதம் அங்கிருந்த 17 வயதுடைய சிறுமியுடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது. பின்னர், அந்த காதல் மோகத்தால் தவறான […]
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது விதமான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யா இராணுவ வீரர்கள், வட கொரியா சில வீரர்களும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏவுகணையின் பெயர் புயல் நிழல் ஏவுகணை (Storm Shadow Missile) உலகிலேயே புயல் நிழல் ஏவுகணை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்பதும் தெரியவந்திருக்கிறது. அதைப்போல, உக்ரைன் மீது கண்டம் […]
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் என்பது நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்ற நிலையில், அதில் 117 கைதிகளை போர்க்கால அடிப்படையில் இஸ்ரேல் உயிருடன் மீட்டது. மேலும், ஹமாஸ் அமைப்பில் கொல்லப்பட்ட கைதிகளின் உடல்களையும் இஸ்ரேல் மீட்டுள்ளது. மேலும், 101 இஸ்ரேலியர்கள், தற்போது ஹமாஸ் வசம் உள்ள நிலையில் இன்னுமும் இஸ்ரேல் […]
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தையும் நேற்று காலை முதல் கடும் வீழ்ச்சியை கண்டு சரிவிலே முடிந்தது. இந்த நிலையில், அதானி நிறுவனங்களுடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்த கென்யா அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க முன் வைத்த குற்றச்சாட்டு : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு […]
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணிற்கு சென்றார். 8 நாள் பயணம் என்று தான் இந்த விண்வெளி பயணம் தொடங்கியது. ஆனால் 160 நாட்கள் கடந்தும் இன்னும் பூமிக்கு திரும்பாமல் விண்வெளியில் இருக்கிறார்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர். இவர்கள் இருவரும் எப்போது பூமிக்கு திரும்பி […]