இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதிகமான […]
நாம் எல்லாருமே இளமையாக இருப்பதை தான் விரும்புகிறோம். ஆனால், நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஒரு வயதிற்கு மேல் நமக்கு வயது முதிர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் சாயினோர் என்ற மூதாட்டி தனது 107-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த பெண்மணி 1912-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தார். இவர் இளம் வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத பற்று கொண்டிருந்தார். இவர் தனது நீண்ட ஆயுளுக்கான காரணத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]
பிரேசில் நாட்டை சேர்ந்த, போதை கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா. இவர் போதை பொருள் விற்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் போதை பொருளை வாங்குமாறு கடற்கரை ஓர கிராம மக்களை மிரட்டியும், மூளை சலவை செய்தும் விற்பனை செய்து வந்துள்ளார். சில்வா மீது பல குற்றங்கள் இருந்து வந்த நிலையில், பிரேசில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர் சிறையில் இருந்து எப்பிடியாவது தப்பிச் செல்ல வேண்டும் என எண்ணி, அவரை […]
மாநிலங்களவையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கடும் விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினார். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.அப்பொழுது அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசினார். அவர் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்.இந்தியாவில் […]
பல நாடுகளில் கருக்கலைப்பை என்பது ஒரு பெண்ணின் உரிமையாக இருந்து வந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனையடுத்து அந்நாட்டுபெண்கள் உடல் ரீதியிலோ அல்லது மனரீதியிலோ ஆபத்து இருக்கும் நிலையில், இரண்டு மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர், அவர்கள் அனுமதியுடன் பரிசோதனை செய்து கொள்ளலாம். நியூசிலாந்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து […]
மனிதனாய் பிறந்த யாரையும் ஆசை என்பது, விட்டு வைத்ததில்லை. நம்மில்அநேகருக்கு ஒரு கனவுஉண்டு. இந்த உலகம் முழுவதையும் எப்படியாவது சுற்றி பார்த்திவிட வேண்டும் என்று அனைவரும் கனவு காண்பதுண்டு. ஆனால் பலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் உலகத்தை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இதற்காக, அவர்கள் தெற்கு இங்கிலாந்தின் மேற்கு சசெக்சில் உள்ள குட்வுட் பகுதியில் இருந்து, விமானிகளின் ஸ்டிவ் ப்ரூக்ஸ் மற்றும் மாட்ஜோன்ஸ் ஆகியோர் ஒற்றை விமானத்தில் புறப்பட்டுள்ளனர். 30 […]
தாய்லாந்து நாட்டில், லோப்புரி மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக நீரில் மூழ்கிய புத்தர்கோவில் தற்போது வறட்சியின் காரணமாக வெளியே தெரிகிறது. இதனையடுத்து, இந்த கோவிலை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தலையில்லாமல் இருக்கும் சிலைக்கு கீழ், மக்கள் மலர்களால் அலங்கரித்து, ஊதுபத்திகள் ஏற்றி வைத்தும் புத்தரை மக்கள் வழிபட்டு வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வறட்சியால், 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.
ஃபிராங்கி ஸபாட்டா என்பவர் ஒரு இராணுவ வீரர் ஆவார். இவர் ஜெட் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய அளவிலான பறக்கும் விமானம் ஒன்றை பிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த இந்த விமானத்தில் நின்றபடி ஃபிராங்கி பிறந்துள்ளார். இதனை காண சாங்கட்டே பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். இந்நிலையில், இவர் கண்டுபிடித்த அந்த பறக்கும் இயந்திரத்தில், தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்சையும் பிரிக்கும், ஆங்கிலக் கால்வாயை கடந்து சென்றுள்ளார். இவர் கடந்து செல்லும் இந்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் […]
லேப்ரடார் கலப்பினத்தை சேர்ந்த நாய் ஒன்று, அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தின் தெருவோரத்தில், பிரசவ போராட்டத்தில் இருந்துள்ளது. இதனைக்கண்ட விலங்கின பாதுகாப்பு அதிகாரிகள் அதை பத்திரமாக அடைக்கலம் கொடுத்து, அதற்கு ‘லூனா’ என்று பெயரிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நாய்க்கு கால்நடை மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நாய் 20 அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. இதற்க்கு முன்பு 2004-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில், ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று பல நாடுகளில் வித்தியாசமான முறையில் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் ஒரு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் பீர் அருந்திக் கொண்டே ஓட வேண்டும். ஜெர்மனியின், பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பயன்படுத்திய பீரில், 5 சதவீதம் மட்டுமே மது கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வினோதமான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் இந்த போட்டி […]
சீனாவில் உள்ள குயாங்டான்க்கில் வசித்து வருபவன், சாங் யாங்ஷீ. பத்தே வயது ஆகும் இவன், டைனோசர் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தான். இந்நிலையில், வழக்கம்போல் மாலை நேரத்தில் நதிக்கரையோரம் விளையாண்டு கொண்டிருந்தான். விளையாண்டி முடித்து விட்டு, ஓய்வெடுக்க கல்லின் மீது அமர்ந்துள்ளார். அப்போது அந்த கல், வித்தியாசமாக தெரிந்துள்ளது. உடனே தனது பெற்றோரிடம் அச்சிறுவன் கூறியுள்ளார். உடனே, அவனது பெற்றோர்கள் அந்த கல்லை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர். அதுகுறித்து ஆராய்ந்து பார்க்கையில், அது டைனோசர் […]
இன்றைய நாகரீகமான உலகத்தய் பொறுத்தவரையில் அனைத்துமே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. நாம் சைக்கிளில் பயணம் செய்த அனுபவம் எல்லாருக்கும் உண்டு. ஆனால், அனா சைக்கிளை நாம் சாலையில் தான் ஓட்டியிருப்போம். ஆனால், இங்கு எகிப்தில் சைக்கிளை தண்ணீரில் ஓட்டுகிறார். எகிப்தில் உள்ள நைல் நதியில், இரண்டு மிதவைக்கு நடுவில் சைக்கிளை பொருத்தி வைத்துள்ளனர். அந்த சைக்கிளை நைல் நதியில் தண்ணீரில் விட்டு, அதனை மிதித்தால், சைக்கிள் நதியில் நகர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எகிப்து ஆற்றில் சைக்கிள் ஓட்டும் […]
எல்லையில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்மீர் மாநிலத்தில் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.வெள்ளை கொடி உடன் வந்து அந்த 7 பேரின் உடலை எடுத்த செல்லுமாறு இந்திய இராணுவம் கூறியது. இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் இம்ரான் கான் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள்.காஷ்மீர் […]
அமெரிக்காவில் நேற்று டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தபொதுமக்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 20 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போதும் ஓஹியோவில் ஒரு பகுதியில் மர்மநபர்கள் திடீர் துய்ப்பாகி சூடு. அதில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
துபாயில் ஒருவர், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசியுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இவர் பதிவிட்ட இந்த வீடியோ குறித்து துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதனையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துபாய் காவல்துறையின் இயக்குனர் ஃபைசல் குவாஸிம் இதுகுறித்து கூறுகையில், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசிய நபரை தேடி வந்தோம். அவரை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளோம் என்றும் […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று நடந்த துப்பாக்கி சூட்டில், 19பேர் உயிரிழந்தனர். மேலும், 22பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த சிலர், அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்களை நோக்கி சுட்டார்கள். இதுகுறித்து அந்நாட்டு காவல் துறையினர் சந்தேகத்திற்குறிய ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்குஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்டனம் தெரிவித்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது […]
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண்மணி அலானா கட்லான்ட். இவருக்கு வயது 19. இவர் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனையடுத்து, அலானா தொழில் முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடாஷ்கருக்கு சென்று அங்குள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து கடந்த 25-ம் தேதி, இவர் உயிரினங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றுள்ளார். முடிந்ததும், மீண்டும் விமானத்தில் அஞ்சாஜாவிற்கு புறப்பட்டார். இந்நிலையில், […]
கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள தெரபி நகரில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்நிலையில், இறுதி சுற்று போட்டியில், ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டத்தை பாஷா முகர்ஜி தட்டி சென்றார். இந்த பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர் தனது 9-வயதிலேயே இங்கிலாந்தில் குடிபுகுந்தார். இதுகுறித்து பாஷா கூறுகையில், இங்கிலாந்தில் மைனாரிட்டியாக வாழும் […]
கிரீன்லாந்து நாட்டில் கோடைகாலத்தில் 50 சதவீத பனிக்கட்டிகள் உருகி விடுவது வழக்கம். இதை தொடந்து வரும் குளிர் காலங்களில் மீண்டும் பனிக்கட்டிகள் உறைந்து விடும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் தாக்கி வருகிறது. இதனால் அங்குஉள்ள பனிக்கட்டிகள் அதிகமாக உருக தொடங்கி உள்ளது.இந்நிலையில் கிரீன்லாந்தில் ஒரே நாளில் மட்டும் 1100 கோடி டன் பனிப்பாறை உருகி கடல் நீர்மட்டத்தை அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பனிப்பாறைகள் உருகும் விடீயோவை ஆவணப்பட தயாரிப்பாளர் […]
ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில், ஒரு குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் இருந்த துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், நாளுக்குநாள் ஈக்களின் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்துள்ளனர். திறந்து பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அந்த வீட்டிற்குள் ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அந்த ஆண் அலெக்சாண்டர் […]