ஜெனிவா : இந்த ஆண்டில் இதுவரை பல நாடுகளில், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மக்களும் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை (Mpox) என்பது ஒரு ஜூனோசிஸ் ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகில் வாழும் உயிரங்களுக்குப் பரவக் கூடிய தொற்று நோயாகும். […]
அமெரிக்கா : ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வரும் வெள்ளியன்று அமெரிக்க பொருளாதார கொள்கைக்கான பிரச்சார அறிக்கையை வெளியிட உள்ளார். வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் என இருவரும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். மேடை பிரச்சாரங்கள், நேர்காணல்கள் என மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் டொனால்ட் டிரம்ப், அண்மையில் கூட எலான் மஸ்க் உடன் எக்ஸ் பக்கத்தில் “எக்ஸ் ஸ்பேஸ் ” நிகழ்ச்சி வரையில் […]
அமெரிக்கா : டொனால்ட் டிரம்ப் உடனான ” எக்ஸ் ஸ்பேஸ் ” உரையாடலை தொடர்ந்து எலான் மஸ்க், அடுத்ததாக கமலா ஹாரிஸுக்கு “எக்ஸ் ஸ்பேஸ்”-இல் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக முன்னாள் அமெரிக்க அதிபர் […]
வங்கதேசம் : இந்தியாவின் சுதந்திரம் , பாகிஸ்தான் பிரிந்து சென்ற காலத்திற்கு பின்பிருந்து, 1971க்கு முன்பு வரையில் வங்கதேசம் என்ற நாடு இல்லை. வங்கதேச நாட்டின் பெயர் கிழக்கு பாகிஸ்தான். தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது வங்கதேசம். 1971 கலவரம் : அந்த சமயம், 1970ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) நடைபெற்ற தேர்தலில் ஷேக் முஜ்புர் ரஹ்மான் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து ‘வங்கதேசம்’ தனி நாடு கோரிக்கையை இந்தியாவின் ஆதரவோடு முன்னிறுத்தினார். இந்திய […]
நாசா : அமெரிக்க விண்வெளி தளமான நாசாவில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நகரத்திற்கு ( International Space Station) சென்றனர். 8 நாள் பயணமாக சென்ற இவர்கள் இன்னும் பூமிக்கு திரும்பாமல் உள்ளனர் என்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. பூமிக்கு திரும்ப திட்டம் : போயிங் நிறுவனத்தின் ஸ்டர்லைனர் எனும் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் […]
வங்கதேசம் : இடஒதுக்கீடு , மாணவர்கள் போராட்டம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புகளை தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தற்காலிமாக தஞ்சம் அடைந்தது வரையில் அனைத்தும் தலைப்பு செய்திகளாக நமக்கு தெரிந்த கதையாகி உள்ளது. இந்தியாவில் தஞ்சம் : ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்குமா என்பது சந்தேகமே. ஷேக் ஹசீனா அடுத்ததாக இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில் , அந்நாட்டு சார்பாக வெளியான தகவலின் படி, […]
வங்கதேசம் : வங்கதேசத்தில் விடுதலை போரட்ட வீரர்களின் சந்ததிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். பொதுச்சொத்துக்கள் பெருமளவு சேதமடைந்தன. பின்னர், இந்த இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அப்போது மாணவர்கள் போராட்டம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரத்தில் இதுவரை சுமார் […]
வங்கதேசம் : பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் நாட்டை விட்டு ஹெலிகாப்டரில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் ஏற்கனவே 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் நடந்த புதிய போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் […]
ஐ.நா கூட்டத்தொடர் : கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது இந்தியர்கள் மத்தியில் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் டிஜிட்டல் வாயிலாக பரிவர்த்தனை என்பது அசுரவளர்ச்சி அடைந்துள்ளது என்பதை சிறு சிறு கடைகளில் இருக்கும் QR ஸ்கேனர் கூட எடுத்துரைத்து வருகிறது. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் கொண்டு ஏழைகள், ஏழ்மையில் இருந்து முன்னேறி வருவதாக ஐ.நா மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 78வது கூட்டத் தொடர் தலைவர் […]
இன்டெல் : அமெரிக்கவின் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் தான் ‘இன்டெல்’. தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் தற்போது வந்தாலும், இன்டெல் சிப்க்கான தனித்துவம் என்பது இன்று வரை இருந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல்லின் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40% சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்கு இன்டெல் நேற்று (ஆகஸ்ட்-1) புதிய திட்டம் […]
இஸ்ரேல் : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பிணை கைதிகளில் பெரும்பாலனோர் திரும்பிய நிலையில், ஹாமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரையில் போர் நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் கூறி, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இதுவரை காசா நகர் தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் […]
இஸ்மாயில் ஹனியே : தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டிருப்பது மத்திய கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது. இந்த நிலையில், ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இஸ்மாயில், அங்கு அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் […]
ஈரான் : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது. மேற்கொண்டு 90,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் இன்னும் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் […]
வயநாடு : கேரளாவில் உள்ள வயநாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் குறிப்பாக மலப்புரம், கன்னூர் போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக நேற்று 2 மணியளவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், 20 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. அதை தொடர்ந்து பலரும் இன்னுமும் நிலச்சரிவில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகளையும் தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நிலச்சரிவில் […]
ரஷ்யா : 800 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று கமாஸ் ட்ரக் மீது மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் வரை காயமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 20 பெட்டிகள் கொண்ட ரயில், மாஸ்கோவிற்கு தெற்கே 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ள கோட்டல்னிகோ நிலையத்திற்கு அருகில் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து, 324 அவசரகால பணியாளர்கள் […]
ஜெர்மனி : ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி ‘டெய்லர் ஸ்விஃப்ட்’ இசை நிகழ்ச்சியைக் காண்பதற்காக மைதானத்திற்கு அருகே இருந்த மலை மீது ஏரளமான ரசிகர்கள் குவிந்தனர். இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதனால், கூட்டம் கடலென திரண்டதால் வரலாறு காணாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், பல்வேறு இசை விருதுகளை வென்று, உலக அளவில் மிகுந்த புகழ் கொண்டவர். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்துவது […]
US தேர்தல் 2024 : இந்தாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னதாக தற்போதைய அதிபர் ஜோ பைடனும் அறிவிக்கப்ட்டனர். ஜோ பைடனின் உடல்நிலை, பேச்சில் தடுமாற்றம் ஆகியவை சொந்த கட்சியினரையே பதட்டமடைய செய்தன. இதனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலக்கோரி தொடர் அழுத்தங்கள் எழுந்தன. மேலும், ஜோ பைடனுக்கான தேர்தல் பிரச்சார […]
அமெரிக்கா : இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் 5-ம் தேதி அன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்பும் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகு வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம் மற்றும் மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலகினார். […]
உக்ரைன் : ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்துகின்றனர். சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி […]
இலங்கை : கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களுக்குள் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனை தொடர்ந்து அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். மேலும், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார். தற்போது, அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான […]