Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக […]
Germany : ஜெர்மனியில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகத்தில் அதிக நாடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் கஞ்சாவும் ஒன்றும். அப்படியான இந்த கஞ்சா பயன்பாடு ஜெர்மனியில் சட்டபூர்வமாக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இனிமேல் ஜெர்மனி நாட்டில் இருக்கும் 18 வயதினோர் 25 கிராம் கஞ்சாவை தங்களுடைய கையில் வைத்து கொள்ளலாம். அதைப்போல, ஒரு வீட்டில் 3 கஞ்சா செடி வரை வளர்த்து கொள்ளலாம். ஏற்கனவே, கஞ்சாவை பயன்படுத்த சட்ட ரீதியாக […]
Afghanistan: ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு அங்கு ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் எப்போதும் நிலவும் வகையில் உள்ளது. ஏனென்றால், தாலிபான்களின் ஆட்சியில் பல்வேறு விதிமுறைகள், அறிவிப்புகள் வந்த […]
Isreal : இஸ்ரேல் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தற்போது வரையில் இஸ்ரேல் ராணுவம், ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் அதில் பெரும்பாலும் காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்த சொல்லி பல்வேறு நாடுகள் […]
Israel : இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காசா நகரில் பெண்களின் உள்ளாடைகளுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹாமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், காசா நகரில் சுமார் 20 […]
Argentina : அர்ஜென்டினா பொருளாதாரம் சரிவு காரணமாக அந்நாட்டில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே (Javier Milei) கடந்த டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் அந்நாட்டின் பொருளாதரம் சரிவை சந்தித்து வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நேற்று முன்தினம், நாட்டின் […]
Baltimore Bridge: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் கொடியுடன் கூடிய டாலி என்ற கொள்கலன் கொண்ட அந்த சரக்கு கப்பல் 47 ஆண்டுகள் பழமையான பாலத்தின் மீது நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானது. […]
America : அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துகுள்ளானது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதியதில் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்ட பால்டிமோர் பாலம் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ???? BREAKING – Singapore-flagged cargo ship, the Dali, was being tracked by US Coast […]
Pakistan : பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண கடற்படை தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் அந்நாட்டின் 2வது மிக பெரிய கடற்படை தளம் மீது நேற்று பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. பலுசிஸ்தான் PNS சித்திக் கடற்படை தளம் மீது நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் PNS சித்திக் கடற்படை தளத்தில் சுமார் 10 இடங்களில் பயங்கர சத்தத்துடன் […]
Moscow Attack : மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நேரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுமார் 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த […]
Australia: ஆஸ்திரேலியாவில் தீவிபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் ஷெரின் ஜாக்சன். இவர் ஆஸ்திரேலியாவின் டப்போ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். ஷெரின் கணவர் பெயர் ஜாக்சன் ஆகும். இந்த நிலையில் ஷெரின் வசித்து வந்த வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. Read More – நபரின் வயிற்றுக்குள் உயிருடன் விலாங்கு! வியந்த மருத்துவர்கள் இதில் சிக்கி படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஷெரினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் […]
Vietnam: வியட்நாமில் நபர் ஒருவரின் அடிவயிற்றில் இருந்து 30 சென்டிமீட்டர் நீளமுள்ள விலாங்கு மீனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். நோயாளி வயிற்றில் இருந்து அகற்றிய விலாங்கு மீன் உயிருடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குவாங் நின் மாகாணத்தை சேர்ந்த 34 வயது நபருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. Read More – மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: 11 […]
Moscow Attack: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் அரங்கத்திற்குள், திடீரென நுழைந்த ராணுவ உடை அணிந்திருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக […]
Russia : ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் வெளியே கிரோகஸ் நகரில் நேற்று பிரபல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். அப்போது சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து வெடிகுண்டு வீசியும் துப்பாக்கியால் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் கடயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு […]
Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் […]
Arunachal Pradesh : கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சகம் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்றும், அருணாச்சலப் பிரதேசம் என்று இந்திய அரசால் சட்டவிரோதமாக அந்த பகுதி அழைக்கப்படுவதாகவும், அதனை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது . Read More – 3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் […]
World Happiest Country 2024 : இன்று உலகமெங்கும் சர்வதேச மகிழ்ச்சி தினம் (மார்ச் 20) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவை பொறுத்து அந்த நாட்டின் மகிழ்ச்சி தரவரிசை சர்வதேச அளவில் வெளியிடப்படுவது வழக்கம். Read More – இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.! இந்தாண்டு மொத்தம் 143 நாடுகளில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவிடப்பட்டு தரவரிசை வெளியிடபட்டுள்ளது. அதில், முதலிடத்தில் பின்லாந்து […]
Intermittent Fasting : உடல் எடையை குறைப்பதற்கும், உடலை ஃபிட்டாக வைப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தேவையான உணவு உட்கொண்டு மற்ற நேரங்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது பிரபலமான ஒரு யுத்தி ஆகும். அதன்படி, உடல் எடையை குறைப்பதற்காக பலர் அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில், உண்ணாவிரதம் இருப்பது குறித்து மருத்துவ ஆய்வில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. Read More – உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன? இதுதொடர்பாக சிகாகோவில் […]
HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள். நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் […]
King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் […]