Categories: உலகம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் பிரதமர் மோடி..!

Published by
செந்தில்குமார்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹிரோஷிமா சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.

இதனையடுத்து, ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, வியட்நாம் பிரதமர் பாம் மின் சென் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், இன்று ஹிரோஷிமா சென்றடைந்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, உக்ரைன் போரை பொருளாதாரம், அரசியல் பிரச்சினை என்று நான் கருதவில்லை, என்னைப் பொறுத்தவரை இது மனிதநேயப் பிரச்சினை. போரைத் தீர்க்க இந்தியாவும் நானும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று கூறினார். மேலும், கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பிறகு இரு நாட்டு பிரதமர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago