Isrel [Imagesource : BBC]
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால், காசா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம், காச பகுதியில் மிசாரத்தை துண்டித்துள்ளதோடு, அங்கு உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
காஸாவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு, இஸ்ரேல், எகிப்து நாட்டின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஸாவில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், காஸாவில் உள்ள மக்கள் நிலை குறித்து ஐநா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், காஸாவில் 50,000 கர்ப்பிணிகள் உணவு, மருத்துவ சேவை மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். காசா நகரத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.2400 கோடி தேவைப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், காஸாவில் உச்சகட்ட மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. அதே சமயம், காஸாவில் மின்விநியோகம் தொடர வேண்டும் என்றால், இஸ்ரேல் பிணைய கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…