Albanese aus pm [Image-Twitter/@AlboMP]
பிரதமர் மோடி தான் பாஸ் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார், அங்கு சிட்னியில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான கலாச்சார விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை, ஆஸ்திரேலிய பிரதமர் புகழ்ந்து பேசியுள்ளார். அப்போது பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பிரதமர் மோடி தான் பாஸ் (“தலைமையாளர்”) என்று கூறினார்.
மேலும் பேசிய அல்பனீஸ், பிரதமர் மோடி பிரபலமாக உள்ளதை, மற்றொரு பிரபலம் அமெரிக்க பாடகரான ராக்ஸ்டார் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுடன் ஒப்பிட்டார். ரசிகர்கள் மத்தியில் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனுக்கு ” தி பாஸ்” என்ற பெயர் உண்டு. சிட்னி மைதானத்தில் மோடியைப் பார்த்ததும் எழுந்த, வந்தே மாதரம், மோடி மோடி, பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட முழக்கங்கள் மற்றும் மோடிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த அல்பனீஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை விட மோடிக்கு புகழ் அதிகம் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்தார். நீங்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ள விரும்பினால், ரயிலிலும் பேருந்திலும் பயணம் செய்யுங்கள் என்று கூறினார். மார்ச் மாதம் நான் இந்தியாவில் இருந்தபோது, குஜராத்தில் ஹோலி கொண்டாடியது, டெல்லியில் மகாத்மா காந்திக்கு மலர்வளையம் வைத்தது, மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த பயணமாக இருந்தது.
பிரதமராக தனது முதல் ஆண்டை இன்று கொண்டாடுவதாகவும், நான் எனது நண்பரான பிரதமர் மோடியுடன் மேடையில் நிற்பது மிகவும் சிறப்புமிக்க தருணம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…