முக்கியச் செய்திகள்

உக்ரைன் தாக்குதலால் லைவ் ஷோவில் ரஷ்ய நடிகை உயிரிழப்பு..!

Published by
murugan

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு இடையே உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய நடிகை ஒருவர் உயிரிழந்தார். ரஷ்ய நடிகை போலினா மென்ஷிக் கிழக்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷ்ய இராணுவ வீரர்களுக்காக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது உக்ரைன் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ‘மேடையில் மென்ஷிக் ரஷ்ய வீரர்களுக்காக கிட்டார் வாசிப்பதையும், பாடுவதையும் காணலாம். அப்போது திடீரென உக்ரைன் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. உடனே அந்த கட்டிடம் அதிர்வு ஏற்பட்டு வீடியோ நின்று விடுகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய நடிகை போலினா மென்ஷிக் உயிரிழந்தார்.

மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். எனினும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் உக்ரைனில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஒப்புக்கொண்டது.

 

 

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

8 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

9 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

9 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

10 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

11 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

11 hours ago