Categories: உலகம்

G20 Summit : உக்ரைன் உடனான போர்.. ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஜி20 மூலம் தெரிந்து கொள்ளலாம். – ஐரோப்பிய கவுன்சில் தலைவர்.!

Published by
மணிகண்டன்

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடனான பொருளாதர தொடர்பை துண்டித்துக்கொண்டன. அதே போல ரஷிய அதிபர் புதினும் பெரும்பாலும் எந்த நாட்டிற்கும் வெளியுறவு விவகாரம் தொடர்பாக செல்வதில்லை.

தற்போது இந்தியா, டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று காலை முதலே உலக நாட்டு தலைவர்கள் டெல்லிக்கு விமானம் மூலம் வந்துகொண்டு இருக்கின்றனர் . இவர்களுக்கு அரசு முறை மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதில் ரஷ்யா சார்பாகவும், சீனா சார்பாகவும் அந்நாட்டு அதிபர்கள் கலந்துகொள்ளவில்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு பதில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ் கலந்துகொள்ள உள்ளார். அதே போல சீன அதிபருக்கு பதில் சீன பிரதமர் லி கியாங் கலந்துகொள்ள உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டில் ஐரோப்பா கவுன்சில் சார்பாக கலந்துகொண்ட அதன் தலைவர் சார்லஸ் மைக்கேல் டெல்லி வந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த G20 கூட்டத்தில் உக்ரைன் நாட்டின் மீதான போர் விவகாரம் குறித்து ரஷ்யாவின் நிலைப்பாடு பற்றிய ஓர் தெளிவை ஏற்படுத்த எங்களுக்கு இது ஓர் நல்ல சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை தொடுத்து, கருங்கடலை போர்க்களமாக மாற்றி வருகிறது என்றும். வளரும் நாடுகளுக்கு எதிரானசெயல்பாட்டில் ரஷ்யா ஈடுபடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago