அரசியல்

ஒடிசா ரயில் விபத்து – ஒடிசா விரையும் பா.ஜ.க உதவி குழு…!

Published by
லீனா

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள பாஜக தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஒடிசாவில் நடைபெற்ற  ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய,  தமிழர்களை மீட்கவும், அவர்களை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்து சேர்க்கவும் தமிழக அரசு தரப்பில் அபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள பாஜக தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரிசா ரயில் விபத்து – பா.ஜ.க உதவி குழு
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும். துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது.

மீட்பு பணிகள் தொய்வின்றி இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த விபத்தில் சிக்கிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பரிபூரண உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பி தங்கள் குடும்பத்தாருடன் இணைந்திடும் வரை துணைநின்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தமிழக பா.ஜ.க சார்பில் கீழ்கண்ட குழுவானது அமைக்கப்பட்டு. இக்குழுவானது இன்றே ஒடிசா விரைந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பா.ஜ.க உதவி குழு விவரம்:

தேசிய உறுப்பினர், ரயில்வே பயணிகள் வசதிகள் ஆலோசனை குழு
1.திரு.K.ரவிச்சந்திரன் PH : 98409 45919
2. திரு.K.P.ஜெயகுமார் மாநில தலைவர், பிற மொழி பிரிவு PH : 9444049949
3.திரு.A.N.S.பிரசாத் முன்னாள் மாநில தலைவர். ஊடக பிரிவு PH : 98401 70721

விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் உற்றார். உறவினர். நண்பர்கள் யாருக்கேனும் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

10 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

10 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

13 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

13 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

14 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

15 hours ago