அரசியல்

மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழுக்கள்…! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published by
லீனா

மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேச்சு. 

திருச்சியில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் ’வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என பெரியார் கூறி உள்ளார். அதன் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மகளிர் சுய உதவி குழுக்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989ம் ஆண்டு தொடங்கியா நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 7,22,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது.

நான் யாருக்கு பரிசு அளிப்பதாக இருந்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் வழங்குவேன். எனக்கு பரிசுகள் வழங்குபவர்களிடமும் அந்த பொருட்களை வழங்க வேண்டும் என வேண்டுகோளை வைத்துள்ளேன். திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கும்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

9 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

10 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

10 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

11 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

12 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

12 hours ago