ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மேற்கு ஆசிய உச்சக்கட்டத்தில் பதற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நடந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. ஈரான் முன்பே அறிவித்ததால் காயம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஈரானுக்கு நன்றி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது பெரும் சந்தேகத்தை கிளப்புவதால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணாமாக, கத்தார், […]
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் பதிவில், ”இன்னும் 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் தொடங்கும், ஈரான் முதலில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும், அதைத் தொடர்ந்து 12 மணி நேரம் கழித்து இஸ்ரேல் அமல்படுத்தும். இதன் மூலம் போர் அதிகாரப்பூர்வமாக 24 மணி நேரத்தில் முடிவடையும். இதை “12 நாள் போர்” என்று அழைக்க வேண்டும், இந்தப் […]
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில், தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில், நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் தரப்பு எச்சரித்திருந்தது. எனவே, அங்கு பதற்றம் உச்சத்திற்கு சென்றிருக்கும் சூழலில், ஈரானின் […]
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த பதற்றமான சூழலில்,நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தும் இருந்தார். ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி […]
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய தாக்குதல் 10வது நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. தற்போது, ஷாத், டெஸ்ஃபுல் மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஆறு ஈரானிய இராணுவ விமான நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் […]
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஈரானின் அணு உலகைகள் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஈரானிய இந்த நடவடிக்கை உலக எரிசக்தி சந்தையில் கவலைகளை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் குறைப்பு ஏற்படக்கூடும். இது எரிசக்தி விலைகளை அதிகரித்து […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் குறித்து தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அதிபர் டிரம்ப், ”அமெரிக்க தாக்குதலில் ஈரானுக்கு மிகப் பெரிய […]
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்திற்குள் நுழைந்த ஒருவர் வெடிகுண்டு பெல்ட்டை வெடிக்கச் செய்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவில் ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதலுக்கும் ISIS அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என […]
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. அதே நேரம் 400 பேர் பலியானதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 3,056 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சுழலில், ஈரானின் அணு உலகைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மிகுந்த கோபத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தக்க […]
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் ‘மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று […]
தெஹ்ரான் : இஸ்ரேல் – ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல போரில் இன்று அமெரிக்காவும் நேரடியாக இறங்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய அணு உலைத் தளங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், இதை “பெரிய இராணுவ வெற்றி” என்றும் கூறினார். […]
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதல்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக […]
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம்,” என்று அறிவித்துள்ளது. ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமன் தனது கடல் எல்லைப் பகுதியான சிவப்புக் கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. […]
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியுள்ளன. அமெரிக்க செனட் சபையின் முன்னாள் பெரும்பான்மைத் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினருமான சக் ஷூமர், “அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஈரானை தாக்கியதற்கு டொனால்ட் டிரம்ப் பதில் அளிக்க வேண்டும்,” என்று கடுமையாக விமர்சித்தார். இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல்-ஈரான் மோதலின்10-வது நாளில், அமெரிக்கா முதல் முறையாக நேரடியாக களமிறங்கியதைக் குறிக்கின்றன, […]
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை நேரடியாக போரில் இறங்காமல் இருந்த அமெரிக்கா இன்று திடீரென நேரடியாகவே போரில் இறங்கியது. இன்று ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று […]
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி போரில் நேரடியாக இறங்கியுள்ளது. ஜூன் 22-ஆம் தேதி ஈரானின் முக்கிய அணு உலைத் தளங்களான ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிப்பதற்காக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதைக் குறிக்கிறது. அமெரிக்க அதிபர் […]
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13, 2025 முதல் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதலில், ஈரானில் 224 பேர் உயிரிழந்ததாகவும், இஸ்ரேலில் 24 […]
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் கோம் மாகாண போலீசார் இன்று தகவல் தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இஸ்ரேலுக்காக […]
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், ‘அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்’என்று கோரியிருந்தார். தற்பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விஷயத்தில் தனது மௌனத்தை கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவில், ”இந்தியா – பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும். பல நாடுகள் இடையே […]
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமைதி பரிந்துரைகளை முன்வைத்தார். ஆனால், இந்த முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுதலித்து, “நான் மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை விரும்பவில்லை” என்று கூறி, புடினுக்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் (ஜூன் 20, 2025) செய்தியாளர்களிடம் பேசிய புடின், இஸ்ரேல் மற்றும் […]