இந்தியாவுக்கு 4- வது பதக்கம்! வெண்கலம் வென்றார் மணீஷ் நர்வால்!

Published by
அகில் R

பாரிஸ் : நடைபெற்று வரும் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 4-வது பதக்கத்தை சேர்த்துள்ளார் மணீஷ் நார்வால். 

பாராலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட மணிஷ் நர்வால் பங்கேற்று விளையாடினார். தொடக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவர் மிகச்சிறப்பாக விளையாடி வந்தார்.

இதன் மூலம் நிலையான புள்ளிகளை பெற்று வந்த மணீஷ், தென்கொரிய வீரரான ஜோ ஜியோங்கிற்கு சவாலாக விளையாடினார். ஆனால், ஜோ ஆதிக்கம் செலுத்தி 237.4 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய மணீஷ் இறுதியில் 234.9 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார்.

வெறும் 22 வயதான மணீஷ் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 50மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் 2024 தொடரில், இந்தியா அணி ஒரே நாளில் 4வது பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற பெண்களுக்கான 100மீ. பாரா ஓட்டப்பந்தய  போட்டியில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், பெண்களுக்கான 10மீ. ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகரா தங்கப்பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், மொத்தம் 4 பதக்கங்களுடன் இந்தியா அணி இந்த பாரா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 10வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஒரே நாளில் 4 பதக்கத்தை வென்றதால் இந்த முறை பாரா ஒலிம்பிக் தொடரில் அதிக பதக்கங்களுடன் அடுத்த கட்ட சாதனையை இந்தியா படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
அகில் R

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago