தற்போது தென்ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம்16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகளை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது.இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 297 ரன்கள் அடித்தனர்.பின்னர் இறங்கிய இலங்கை அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி வீரர் பதிரானா இந்திய அணி பேட்டிங் செய்த போது 4-வது ஓவரை வீசினார். அவரது பந்தை இந்திய வீரர் யாஷவி ஜெயிஸ்வால் எதிர்கொண்டார். அப்போது பதிரானா பந்தை 175 கி.மீ வேகத்தில் வீசினார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிகவேகத்தில் வீசப்பட்ட பந்தாக அது அமைந்தது.
இதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் 161.3 கி.மீ வேகத்தில் வீசினார். அதுவே இதுவரை சர்வதேச போட்டியில் வேகமாக வீசப்பட்ட பந்தாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பதிரானா தகர்த்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…