ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் இடையான “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் 38 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 42 ரன்னிலும்விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களத்தில் ஸ்மித் ,மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினர். ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 114 ரன்கள் எடுத்து விளையாடிகொண்டு இருந்தபோது மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது களத்தில் மார்னஸ் லாபுஸ்சாக்னே 14* ரன்களுடனும் , ஸ்மித் 2* ரன்களுடன் இருந்தனர். பின்னர் மழை நின்ற நிலையில் மீண்டும் போட்டி தொடங்கியது.
போட்டியில் நிதானமாக விளையாடி வந்த ஸ்மித் 26 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். இறுதியில் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 66 ஓவருக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளனர். தற்போது களத்தில் டிராவிஸ் ஹெட் 9* ரன்களுடனும், மார்னஸ் லாபுஸ்சாக்னே 44* ரன்களுடனும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டு தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 320 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…