அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சென்னை வீரர்.!

Published by
murugan
  • ஆல்-ரவுண்டர் சதாப் ஜகாதி அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • சதாப் ஜகாதி ஐபிஎல் தொடரில் சென்னை , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியவர்.

1998-1999 ஆம்  ஆண்டு தனது முதல் வகுப்பு மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சதாப் ஜகாதி அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து உள்ளூர் போட்டிகளில் ஆல் ரவுண்டராகவும் வலம் வந்தார்.

தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில், 91 டி 20 போட்டிகளுடன், 92 முதல் வகுப்பு விளையாட்டுகளிலும் 82 லிஸ்ட் ஏ போட்டிகளில்  ஜகதி இடம்பெற்றுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 400 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

Image result for Shadab Jakati

ஐபிஎல் தொடர் தொடங்கிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009-ம் ஆண்டு அவரை அறிமுகம் செய்தது. பின்னர் ஜகாதி 2010 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார்.

மும்பை அணியின் கேப்டனாக  சச்சின் டெண்டுல்கர் இருந்தார். 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில்  ஷதாப் ஜகாதி15-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 2-வது  பந்தில் சச்சின் விக்கெட்டையும், 5-வது பந்தில் சௌரப் திவாரி விக்கெட்டையும் வீழ்த்தி  திருப்புமுனை ஏற்படுத்தினார். சச்சின் விக்கெட்டை இழந்ததனால் தான் அந்த தொடரில் சென்னை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கோவா அணியில் ஷதாப் ஜகாதி சேர்க்கப்படவில்லை. அதன் பின் பயிற்சியாளராக தனிப்பட்ட முறையிலும், கனடா டி20 லீக்கிலும் செயல்பட்டார். இனி கோவா அணியில் இடம் பெற முடியாது என்ற நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

சச்சின் விக்கெட்  எடுத்தது தான் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த தருணம் என ஓய்வை அறிவித்த பின் ஷதாப் ஜகாதி கூறினார்.  ஷதாப் ஜகாதி 2014-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் 2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிபிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

50 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago