டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கிய கிளாரி போலோசாக்..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிளாரி போலோசாக் என்ற பெண் 4-வது நடுவராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் 2019-ஆம் ஆண்டு நமீபியா, ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.சி.சி. யின் 2-ஆம் நிலை ஒரு நாள் போட்டியில் நடுவராக இருந்தார்.
ஐ.சி.சி விதி படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நடுவராக நியமிக்க அனுமதி உள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிளாரி போலோசாக்வை தேர்வு செய்தது. போட்டியில் பந்து மாற்றும்போது அதை கொண்டுவருவது, இடைவேளையின் போது மைதானத்தை ஆய்வு செய்வது, 3-வது நடுவருக்கு மாற்றாக செயல்படுவது 4-வது நடுவரின் பணிகள்.
லேட்டஸ்ட் செய்திகள்
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025