வீரருக்கு 30 லட்சம் முதல் 3 கோடி வரையில் சம்பளம் அளிக்கலாம்..! பிசிசிஐயை பரிந்துரைக்கும் ஐபிஎல் அணிகள் ..!

Published by
அகில் R

ஐபிஎல்  : ஐபிஎல் தொடரில் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தின் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என ஐபிஎல் அணிகள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்துக்கான ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 30 மற்றும் ஜூலை-31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம் (RTM), இம்பேக்ட் பிளேயர் விதி என பலவற்றை குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

ஏற்கனவே ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியும், நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரின் சாம்பியனுமான கொல்கத்தா அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்து விட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம் என்று பிசிசிஐயை பரிந்துரை செய்தனர். அதே போல் மற்றொரு நட்சத்திர அணியான மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர்.

மேலும், அவர்களை தொடர்ந்து பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் வழக்கம் போல 3 வீரர்களை கடந்து ரீடெய்ன் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று பரிந்துரை செய்தனர். இதனால், சிறிய அணிகளாக கருதப்படும் டெல்லி, பஞ்சாப், லக்னோ போன்ற அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் அவர்களின் ஆண்டு ஊதியத்தை அதிகரிக்கவும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அணிகள் பரிந்துரை செய்தனர்.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த ஒரு குறிப்பிட்ட வீரர் மட்டும் அந்த அணியை விட்டுவிட்டு ஏலத்திற்கு செல்ல விரும்புவார்.

இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடி வரையில் சம்பளத்தை உயர்த்தும் ஒப்பந்தம் அளிக்கலாம் என்று ஒரு சில ஐபிஎல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இதனை எல்லாம் தாண்டி மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் ரூ.100 கோடியில் இருக்கும் பர்ஸ் வேல்யூவையும் (Purse Value) ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

27 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

9 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago