‘இலங்கை தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பார்’ ஜெய்ஷா திட்டவட்டம் ..!

Published by
அகில் R

ஜெய்ஷா : கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமைபயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் ட்ராவிடின் பதவி காலம் இந்த நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்த பயிற்சியாளர் கம்பிர் தான் கிட்டதட்ட உறுதியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ எப்போது அறிவிப்பார்கள் என இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ‘ஜெய்ஷா’ டெலிகிராப் பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த சில முக்கிய அறிவிப்பை கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு இதே கேப்டன் தலைமையில் தோல்வியடையாமல் இறுதி போட்டி வரை வந்து அங்கு ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியதால் நாம் தோல்வி அடைந்தோம்.

ஆனால், இந்த முறை இன்னும் கடினமாக உழைத்து கோப்பையை வெல்ல சிறப்பாக விளையாடினோம். ரோஹித் முதல் விராட் வரை அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த உலகக்கோப்பையில் அனுபவம் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தியிருக்கிறது” என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய ஜெய்ஷா பயிற்சியாளர் குறித்த ஒரு அப்டேட்டையும் கூறி இருந்தார்.

“இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் என இருவரும் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். CAC நேர்காணல் செய்து 2 பெயர்களை தேர்வு செய்துள்ளது. அதுவரை வரும் ஜூலை- 6ம் தேதி நடைபெற உள்ள ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செல்கிறார், அதன்பின் ஜூலை-27 ம் தேதி இலங்கை தொடரில் இருந்து புதிய பயிற்சியாளர் இந்தியா அணியுடன் இணைவார்” என்று டெலிகிராப் பத்திரிகைக்கு பேசிய அவர் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

7 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago