இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் , ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் தவான் 2 ரன்னில் வெளியேற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்கினார்.
நிதானமாக விளையாடி அந்த ரோகித் சர்மா 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடிய விராட் கோலி சதம் விளாசினார். இதனால் இந்திய அணியின் எண்ணிக்கை உயர்ந்த்து.கோலி 125 பந்தில் 120 ரன்கள் குவித்தார்.
பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் நிறைவு செய்து 71 ரன்கள் எடுத்தார்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 279 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கார்லோஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…