உலகக்கோப்பையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின . இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் , ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.பிறகு சிறிது நேரத்தில் அடித்து விளையாட தொடங்கினர்.
சிறப்பாக விளையாடிய குல்படின் நைப் 12 பந்தில் 15 ரன்கள் அடித்தார்.அதில் 3 பவுண்டரி அடங்கும்.பின்னர் களமிறங்கிய முதல் பந்திலே ஹஷ்மதுல்லா அவுட் ஆனார்.அடுத்ததாக இக்ரம் அலி கில் களமிறங்க ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.
12-வது ஓவரில் ரஹ்மத் ஷா 35 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் மத்தியில் விளையாடிய அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா ஸத்ரான் இருவரும் 42 ரன்கள் குவித்தனர். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் அடித்தனர்.
பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டையும் , இமாத் வாசிம் ,
வஹாப் ரியாஸ் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.228 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரரான ஃபகர் சமான் 0 ரன்னில் அவுட் ஆக, இமாம் நிதானமாக ஆடி 36 ரன்களும், பாபர் அசாம் 45 ரன்களும், முகம்மது ஹபீஸ் 19 ரன்கள் என சீரான இடைவெளியில் நிதானமாக ஆடி அவுட் ஆனார்கள்.
ஹரிஷ் ஷோகள் 27 ரன்னில் அவுட்டாக, ஷரஃராஸ் அஹமத் 18 ரன்களில் ரன் அவுட் ஆக, ஷதாப் கான் 11 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் வஹாப் ரியாஸ் 15 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியில் 49.4 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 230 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…