ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெங்களூர் அணி வீரர்களான ஆடம் சாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன், 48 மணிநேரம் காத்திருப்புக்கு பின் தங்களின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்தவகையில் பெங்களூர் அணி வீரர்களான ஆடம் சாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன், 48 மணிநேரம் காத்திருப்புக்கு பின் தங்களின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியா பிரதமர் இந்தியாவுடனான விமான சேவையை நிறுத்தி, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் ஆஸ்திரேலியா திரும்ப வேண்டும் என்றால் தனி விமானம் மூலம், தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…