கத்துனா மட்டும் கோப்பை வராது! பெங்களூரை பொளந்து கட்டிய அம்பதி ராயுடு!

Published by
பால முருகன்

சென்னை : ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மே 22-ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப்போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பெங்களூர் அணியை பற்றி இப்போது பேசினால், அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்.

அது என்னவென்றால், அவர்களுக்கு ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று தான் சொல்வேன். கோப்பையை வெல்லவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. சரியாக விளையாடவேண்டும். சென்னை அணியை வென்றால் மட்டும் கோப்பையை வென்றது போல் ஆகிவிடாது. இதனை கண்டிப்பாக பெங்களூர் அணி புரிந்துகொள்ளவேண்டும். ஐபிஎல் கோப்பையை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் பிளே ஆஃப் சுற்றில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும்.

சில முக்கியமான போட்டிகளில் எப்படி விளையாடினாள் வெற்றிபெறமுடியும் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டு திருத்திக்கொண்டு விளையாடுங்கள்” எனவும் அம்பதி ராயுடு கூறியுள்ளார். மேலும், இந்த போட்டிக்கு முன்னதாக பெங்களூர் அணி சென்னை அணியை எதிர்கொண்டு சென்னையை வீழ்த்தி தான் எலிமினேட்டர் போட்டிக்குள் சென்றது.

சென்னை அணிக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றிபெற்றவுடன் பெங்களூர் வீரர்கள் கொண்டாடிய விதம் விமர்சனங்கள் எழும் வகையில் அமைந்த நிலையில், அதனை மனதில் வைத்து தான் அம்பதி ராயுடு கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று கூறியதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

6 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

6 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

7 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago