ஆஷஸ் : இங்கிலாந்து 294 ரன்னிற்கு அல் அவுட்..! தடுமாறும் ஆஸ்திரேலியா ..!

Published by
murugan

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினர். பின்னர் ஜோ ரூட் விக்கெட்டை இழந்த  பிறகு களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மத்தியில் நிதானமாக விளையாடிய பட்லர் சிறப்பாக விளையாடினார்.

நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து  8 விக்கெட் இழந்து 271 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் , பட்லர் அரைசதம் விளாசினார். களத்தில் பட்லர் 64 , ஜாக் லீச் 10 ரன்களுடன் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்டையும்  , பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவருக்கு 2 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Published by
murugan

Recent Posts

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

8 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

9 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

10 hours ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

11 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

12 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

13 hours ago