INDvPAK asia cup 2023
2023 ஆசிய கோப்பை தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தேர்வாகி விளையாடி வருகின்றன.
நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இந்நிலையில் தான் , இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 56 மற்றும் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 8 மற்றும் 17 ரன்களுடன் களத்தில் நின்றனர். 24.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்த சமயத்தில் சுமார் 4.30 மணியளவில் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது.
மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பிறகு, இரவு 7.30 மணி, 8 மணி, 8.30 மணி என மைதானம் சோதனை செய்யப்பட்டது. பின்னர் ஓவர் குறைக்கப்பட்டு விளையாட அனுமதிக்கலாமா என்று ஆலோசிக்கும் போதே 8.45 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இதன் காரணமாக இன்று அதே 3 மணி அளவில், இந்திய அணி விளையாடி இருந்த 24.1 ஓவரில் இருந்து விளையாட்டு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஏமாற்றத்தில் வீடு திரும்பிய ரசிகர்கள் இன்றைய நாள் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…