Asia Cup 2023 : அதே போட்டி.. அதே நேரம்.. ‘ரிசர்வ் டே’வில் இன்று களம் காணும் இந்தியா – பாகிஸ்தான்.!

Published by
மணிகண்டன்

2023 ஆசிய கோப்பை தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தேர்வாகி விளையாடி வருகின்றன.

நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

ஏற்கனவே இந்த மைதானத்தில் மழை பெய்யும் வாய்ப்பு 90 சதவீதம் உள்ளது என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த காரணத்தால், இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ‘ரிசர்வ் டே’ செய்யப்பட்டு இருந்தது.  மழை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டால் இன்று மீண்டும் இதே போன்று போட்டி தொடரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் , இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 56 மற்றும் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 8 மற்றும் 17 ரன்களுடன் களத்தில் நின்றனர். 24.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்த சமயத்தில் சுமார் 4.30 மணியளவில் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது.

 மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பிறகு, இரவு 7.30 மணி, 8 மணி, 8.30 மணி என மைதானம் சோதனை செய்யப்பட்டது. பின்னர் ஓவர் குறைக்கப்பட்டு விளையாட அனுமதிக்கலாமா என்று ஆலோசிக்கும் போதே 8.45 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

இதன் காரணமாக இன்று அதே 3 மணி அளவில், இந்திய அணி விளையாடி இருந்த 24.1 ஓவரில் இருந்து விளையாட்டு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஏமாற்றத்தில் வீடு திரும்பிய ரசிகர்கள் இன்றைய நாள் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

5 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

17 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago