அடுத்தாண்டு ஐபிஎல் 15-வது சீசனில் மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. அடுத்த சீசனில் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும்.
அதன்படி, 8 அணிகளும் அதிகபட்சமாக 2 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என தக்கவைக்கலாம். முதல் வீரருக்கு ரூ.16 கோடி, 2-வது வீரருக்கு ரூ.12 கோடி, 3வது வீரருக்கு ரூ.8 கோடி, 4வது வீரருக்கு ரூ.6 கோடி ஊதியம் வழங்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில், தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி,
ஆர்சிபி அணி : விராட் கோலி -15 கோடி , க்ளென் மேக்ஸ்வெல் -11 கோடி, முகமது சிராஜ் -7 கோடிக்கு தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.57 கோடி மீதம் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா -16 கோடி, பும்ரா- 12 கோடி, சூர்யகுமார் யாதவ் -8 கோடி , பொல்லார்டு -6 கோடிக்கு தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ.48 கோடி மீதம் உள்ளது.
பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால் – 14 கோடி, அர்ஷ்தீப் சிங் – 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன்-14 கோடி, அப்துல் சமாத் -4 கோடி, உம்ரான் மாலிக் -4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
சிஎஸ்கே – தோனி-12 கோடி, ஜடேஜா -16 கோடி, ருதுராஜ் கெய்க்வாட்- 6 கோடி, மொயின் அலி -8 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
கேகேஆர் – ஆண்ட்ரே ரசல் -16 கோடி, வருண் சக்கரவர்த்தி- 8 கோடி, வெங்கடேஷ் ஐயர்- 8 கோடி , சுனில் நரைன் -6 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
டெல்லி – ரிஷப் பண்ட்- 16 கோடி, அக்ஸர் படேல்-9 கோடி, பிரித்வி ஷா – 7.50 கோடி, அன்ரிக் நோர்க்யா – 6.50 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்- 14 கோடி, ஜோஸ் பட்லர்- 10 கோடி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…