ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது ஆனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது.
பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.காரணம் முதல் இன்னிங்சில் 67 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனதால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற வாய்ப்பு குறைவு என பலர் கூறினர்.
அவர்களின் நினைப்பை பென் ஸ்டோக்ஸ் தகர்ந்து எறிந்தார். நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.இந்நிலையில் இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் திருப்பு முனையாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
மேலும் கடந்த 40 நாள்களில் 3 முறை ஆட்டநாயகன் விருதை வாங்கி உள்ளார். உலகக்கோப்பையில் இறுதி போட்டியிலும் , ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…