சென்னை அணி 13 ஓவர் முடிவில் 61 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது.
இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.
வழக்கம்போல சிறப்பான ருதுராஜ் , ஃபாஃப் கூட்டணி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி வந்த வேகத்தில் 2 பவுண்டரி எடுத்து 12 ரன் எடுத்து போல்ட் ஆனார்.
இதனால், சென்னை அணி 13 ஓவர் முடிவில் 61 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. தற்போது களத்தில் ஜடேஜா 1*, ஃபாஃப் 29* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…