வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக மிக மோசமான செய்தி வெளியாகியுள்ளது. முதல் ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் நெகடிவ் வந்ததாகவும் இன்று நடைபெற்ற சோதனையில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா உறுதியானால் இந்த மூன்று வீரர்களும் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும். பிசிசிஐயின் மருத்துவக் குழு இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த செய்தி உறுதியானால் அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களின் பெயர்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும். இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…