CSKvsGT : பேய் அடி அடித்த சிஎஸ்கே வீரர்கள் ..!! குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு ..!!

Published by
அகில் R

CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான  ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

ஆக்ரோஷமாக விளையாடிய அவர் 3 சிக்ஸர், 6 ஃபோர்களுடன் வெறும் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த போது ரஷீத் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மிகச்சிறப்பாக விளையாடிய அவர் இப்படி திடீரென ஆட்டம் இழந்ததால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேயும் பொறுப்புடன் விளையாடாமல் ஆட்டமிழந்தார். அதன் பின் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் பொறுப்புடன் விளையாட தொடங்கினார்.

மேலும், அவர் ஸ்கோரை உயர்த்த விளையாடிய சிறுது நேரத்திலே 46 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய சிஎஸ்கே அணியின் சிக்சர் ‘டுபே’ குஜராத் அணி பந்து வீச்சை நான்கு பக்கமும் போலந்து கட்டினார். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவரது ஆட்டமானது சிக்சர் மழையாகவும், வானவேடிக்கையாகவும் அமைந்தது என்றே கூறலாம். கடந்த ஐபிஎல் தொடரில் எங்கு விட்ட்டாரோ சிவம் டுபே அதிலுருந்து தொடங்கியது போல தனது ஆட்டத்தை பதிவு செய்தார்.

மிகச்சிறப்பாக விளையாடிய அவர் 2 ஃபோர்கள், 5 சிக்சர்களுடன் வெறும் 22 பந்துகளில் தனது அரை சத்தத்தை கடந்தார். அதனை தொடர்ந்து ரஷீத் கான் பந்து வீச்சில் 19 ஓவரின் முதல் பந்தில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சமீர் ரிஷ்வியும், மிட்ச்செல்லும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே அணியில் புதியதாக களமிறங்கிய சமீர் ரிஷ்வி வந்தவுடன் ரஷீத் கான் பந்தை 2 சிக்சர்கள் மூலம் தூக்கிகடாசினார்.

இறுதி ஓவரின் 2-வது பந்தில் ரிஸ்வியும் 14 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார் . இறுதியில், 20 ஓவருக்கு6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து. இதனால், 207 என்ற இமாலய இலக்கை எட்ட குஜராத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

Recent Posts

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

6 minutes ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

9 minutes ago

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…

31 minutes ago

கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…

1 hour ago

“மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தவெக தலைவர் விஜயின் முதல் பேட்டி!

சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

2 hours ago

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…

2 hours ago