“எனது தெய்வசிலை எப்போதுமே டேல் ஸ்டெய்ன் தான்” என்று கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் சிவம் மாவி பேசியதற்கு தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்ணீர் விட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ESPN ஊடகத்தில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் சிவம் மாவி கலந்துகொண்டார். அப்பொழுது பேசிய அவர், “நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியபோதே டேல் ஸ்டெய்னை மிகவும் நெருக்கமாக பின்தொடர்ந்தேன். அவரைப்பார்த்து தான் நான் அவுட்விங்கர்களை வீச பழகினேன்”
மேலும் பேசிய அவர், “பந்து வீசுவது எப்படி என்பதை அறிய முயற்சிக்கும் போது நான் டேல் ஸ்டெய்ன் வீசும் ஸ்டைலை பின்தொடர்ந்தேன். பும்ரா, புவனேஷ்வர் போன்ற வேறு சில பந்து வீச்சாளர்களின் ஸ்டைல்களையும் நான் பின்பற்றினேன். ஆனால் எனது தெய்வசிலை, எனது ரோல் மாடல் எப்போதுமே டேல் ஸ்டெய்ன் தான்” என்று சிவம் மாவி கூறினார். அவரின் பேச்சை கெட்ட டேல் ஸ்டெய்னின் கண்கள் கலங்கியது.
அதன்பின் பேசிய ஸ்டெய்ன், “உண்மையாக, அவரது வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரை கொண்டு வந்தது. எனக்கு கிரிக்கெட் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அதனால்தான் நான் இப்பவரை விளையாடுகிறேன். சிவம் மாவி சிறப்பாக விளையாடுகிறார். அவர் இப்படியே விளையாடினால், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் அவரது கனவுகளை நினைவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…