பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்று அபுதாபியில் நடைபெற்ற 55-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக படிக்கல் – ஜோஷ் பிலிப் கூட்டணி களமிறங்கியது. 12 ரன்களில் ஜோஷ் பிலிப் வெளியேற, படிக்கல் அதிரடியாக விளையாடி அரை சத்தத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார்.
அவரைதொடர்ந்து களமிறங்கிய கோலி 29 ரன்களும், டி-வில்லியர்ஸ் 35 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. டெல்லி அணியில் பந்துவீச்சை பொறுத்தளவில் அன்ரிச் நார்ட்ஜே சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயயே பிருத்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 41 பந்துகளில் 54 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் அவுட்டானார்.
ஒரு புறம் ரஹானே சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் 60 ரன்கள் அடித்து, வாஷிங்டன் சுந்தர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில் 19 ஓவரில் 154 ரன்கள் அடித்து, 6 விக்கெட்டு வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டியில் வெற்றி பெற்று டெல்லி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் ஷாபாஸ் அகமது 2, சுந்தர் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…