வேற லெவலில் பந்து வீச்சில் மிரட்டிய டெல்லி.., ஆடிப்போன மும்பை..!

Default Image

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.

மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயின்டன் டி கோக்  இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே ஒரு ரன்னில் குயின்டன் டி கோக் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை  சற்று உயர்த்தினர்.

நிதானமாக விளையாடிவந்த சூரியகுமார் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் எடுக்காமலும்,  க்ருனல் பாண்டியா 1, பொல்லார்ட் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

கடைசியில் இறங்கிய ஜெயந்த் யாதவ் 23 ரன்னில் வெளியேறினார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர். டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டையும், அவேஷ் கான் 2 விக்கெட்டையும் பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies