நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ,ஜடேஜா இவர்கள் இருவரின் கூட்டணியில் இந்திய அணியை பரிதாப நிலையில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர்.
போட்டியில் ஜடேஜா 48 ஓவரில் விக்கெட்டை பறிகொடுக்க பின்னர் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தோனி தள்ளப்பட்டார்.இதனை தொடர்ந்து 49 ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார்.அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் நின்றார்,பின்னர் அடுத்த பந்தை அடித்து இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்த போது தோனி ரன் அவுட் ஆனார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரை இறுதி போட்டியை கொல்கத்தாவை சார்ந்த ஸ்ரீ காந்த் மைட்டி என்பவர் செல்போனில் பார்த்து கொண்டு இருந்தார்.அப்போது தோனி ரன் அவுட் ஆன போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்த கடைக்காரர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…