ஒரு சின்ன தப்பால டி20 டீம்ல இடம் போச்சா? அப்படி தினேஷ் கார்த்திக் என்ன செஞ்சாரு?

Published by
அகில் R

Dinesh Karthik : ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் செய்த சிறிய தவறால் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ரங்களை சேர்த்து வருகிறார். கடந்த ஒரு சில போட்டிகளில் ஆர்.சி.பி அணி தோல்விகளை குவித்தாலும். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் விழும்பு வரை பெங்களூர் அணி சென்றிருந்தது. அவரது அதிரடி ஆட்டத்தால் ஜூன் மாதம் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவரை இந்திய அணியில் இடம்பெற வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டுக்கொண்டனர்.

அதே போல அவரும் அணியில் இடம் பெறுவர்  என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல், புரசலாக பேச்சுகள் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியுடன் போட்டியில் ஈடுபட்டது. இந்த போட்டியில் முதலில் பெட் செய்த கொல்கத்தா அணி  222 ரண்களை நிர்ணயித்தது. அதன் பிறகு களமிறங்கிய பெங்களூர் அணி 221 மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி போட்டியை த்ரில்லாக வென்றது.

ஒரு கட்டத்தில் போட்டி கைவிட்டு போனது என நினைத்தபோது தினேஷ் கார்த்திக் நின்று சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கடைசி இரண்டு ஓவர்களுக்கு அதாவது 12 பந்துக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் 3 பந்துகளை தினேஷ் கார்த்திக் சிங்கிள்ஸ் ஓடாமல், பவுண்டரியும் அடிக்காமல் டாட் (Dot)டாக்கி இருப்பார். மேலும் அதே ஓவரில் அடுத்த இரண்டு பந்தில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என பத்து ரன்கள் அடித்திருப்பார்.

இருந்தும் ஏழு பந்துக்கு 21 எண்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுப்பார் என எல்லாரும் கருதப்பட்டது.  அப்போது இந்த பந்தை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆகி இருப்பார். அதை அடிக்க முயன்று அவுட் ஆனதால் தான் பெங்களூரு அணி தோல்வியுற்றது என டிகே வை பெங்களூரு ரசிகர்கள் விமர்சித்து இணையத்தில் பேசி வருகின்றார். மேலும், அந்த போட்டியின் 19-வது ஓவரில் அவருடன் களத்தில் கரன் சர்மா இருப்பார்.

கரன் சர்மா அடிக்க மாட்டார் என 3 பந்துகளும் சிங்கிள்ஸ் கூட எடுக்காமல் இருப்பார் டிகே ஆனால் இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்சேல் ஸ்டார்க்கின் பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசி இருப்பார். இதனால் கரன் ஷர்மாவாலும் அடிக்க முடியும் என்றால் எதற்காக அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூட எப்படி விளையாட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக்கு தெரியவில்லை இவரை டி20 அணியில் எடுத்தால் அங்கேயும் இது போல செய்யமாட்டார் என்பதில் என்ன நிச்சயம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகளும், கேள்விகளும் எழுந்து வருகின்றன. இதனால் இவர் வரவிற்கும் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வைய்ப்புகள் குறைந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago