தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இறுதிப்போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்த சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 126 ரன்கள் சேர்த்தது.
127 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் மூன்று ஓவரில் 3 விக்கெட்டை இழந்தது. மத்தியில் களமிறங்கிய வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 114 ரன்கள் எடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இரண்டாவது முறையாக சேப்பாக் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது. சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டை வீழ்த்திய சேப்பாக் கில்லீஸ் அணி வீரர் பெரியசாமிக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…