தொடர் தோல்விக்கு பின்.. 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி ..!

Published by
murugan

இன்று ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 40-ஆவது லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ,  டேவிட் மாலன் இருவரும் களமிறங்கினர். வழக்கம்போல தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடாமல்  15 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து  ஜோ ரூட் இறங்க தொடங்கவீரர் டேவிட் மாலன் சிறப்பாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்தார். இருப்பினும் நிதானமாக விளையாடிய ஜோ ரூட்   28 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் டேவிட் மாலன் 87 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மலான் 87 ரன்களில் ஆட்டமிழந்து தனது அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் நடு ஓவர்களில் இங்கிலாந்து அணி சற்றுத் தடுமாறியது. காரணம் ஜோ ரூட் (28), ஹாரி புரூக் (11), ஜோஸ் பட்லர் (5), மொயீன் அலி (4) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் மற்றும் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கை கோர்த்து சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி  84 பந்தில் 6 பவுண்டரி , 6 சிக்ஸர் என மொத்தம் 108 ரன்கள் குவித்தார். மறுபக்கம் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் அரைசதம் விளாசி 51 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்டையும், லோகன் வான் பீக், ஆர்யன் தத் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 340 ரன்கள் இலக்குடன் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி ,மேக்ஸ் ஓ டவுட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் பொறுமையுடன் விளையாடி வந்தனர்.

இருப்பினும் மேக்ஸ் ஓ டவுட் 5-வது ஓவரில் வெறும் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 2 பந்துகளில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் சைபிரண்ட் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் வெஸ்லி பாரேசி 37 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். மத்தியில் இறங்கிய  ஸ்காட் எட்வர்ட்ஸ் , சைபிரண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனாலும் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38, சைபிரண்ட் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமால் விக்கெட்டை இழக்க இறுதியாக நெதர்லாந்து அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 179 ரன்கள் எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில்  அடில் ரஷித் , மொயின் அலி தலா 3 விக்கெட்டையும் , டேவிட் வில்லி 2 விக்கெட்டையும் , கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டை பறித்தனர்.

இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி 1போட்டியில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை முன்பு இழந்த நிலையில் இன்றைய போட்டியில்  வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தனது 2 போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இங்கிலாந்து அணி தனது 8 -வது போட்டி(இன்றைய) வெற்றி பெற்றுள்ளது.

நெதர்லாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

 

 

 

 

Published by
murugan

Recent Posts

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

20 minutes ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

34 minutes ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

அன்புமணி பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீங்க…கடுப்பான பாமக நிறுவனர் ராமதாஸ்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…

2 hours ago

3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 hours ago

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

11 hours ago