இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்கராவின் எம்சிசி தலைவர் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

Published by
லீனா

இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்கராவின் எம்சிசி தலைவர் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு.

கிரிக்கெட் விதிகளை சிறப்பாக உருவாக்குவதில், கிரிக்கெட் கவுன்சிலுக்கு முன்னோடியாக திகழ்வது, லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் தான். இந்த கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா பதவி வகித்து வருகிறார். பொதுவாக இதன் பதவி காலம் ஒரு ஆண்டு ஆகும். 

இந்நிலையில், உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை நடத்தி வரும் கொரோனா  வைரஸால், கிரிக்கெட் சம்பந்தமான அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின்  நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, சங்ககராவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதி நடக்கவிருக்கும் இந்த கிளப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் வரை இந்த பணியில் சங்கக்கரா தலைவராக பதவி வகிப்பர்.  மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பின், எம்.சி.சி. தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது, இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

11 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

12 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago