இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்கராவின் எம்சிசி தலைவர் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
கிரிக்கெட் விதிகளை சிறப்பாக உருவாக்குவதில், கிரிக்கெட் கவுன்சிலுக்கு முன்னோடியாக திகழ்வது, லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் தான். இந்த கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா பதவி வகித்து வருகிறார். பொதுவாக இதன் பதவி காலம் ஒரு ஆண்டு ஆகும்.
இந்நிலையில், உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை நடத்தி வரும் கொரோனா வைரஸால், கிரிக்கெட் சம்பந்தமான அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, சங்ககராவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதி நடக்கவிருக்கும் இந்த கிளப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் வரை இந்த பணியில் சங்கக்கரா தலைவராக பதவி வகிப்பர். மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பின், எம்.சி.சி. தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது, இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…